Tuesday, 6 October 2015

எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"

சரியானா பழமொழி :

"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

விளக்கம் :

இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது. கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டதுகடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும்.

********************
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி.
*******************
படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.
படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி.
*******************
ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.
ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் - சரி.
*******************
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - தவறு.
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - சரி.
(சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு... அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது...ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகு்.)
***************
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் - தவறு.
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். -
*************
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்
விளக்கம் : மண் குதிர் '' நம்பி ஆற்றில் இறங்கினால்.

அதாவது மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓட ஆரம்பிக்கும் சமயங்களில் ஆற்றில் அங்கங்கே மண் மேடுகள் போல் தோன்றும்( மண் குதிர்கள்) ஆற்றைக்கடக்கும் முயற்சியில் இந்த மணல் மேட்டில் கால் வைத்தால் அது உள்ளே போகும், நம்மையும் உள்வாங்கி தடுமாறி விழ வைத்து விடும்.

No comments:

Post a Comment