நண்பர்களே நாம் வாகனம் ஓட்டும் போது முடிந்தவரை ஹெல்மெட் அணிந்து மிதமான வேகத்தில் சொல்லுவோம். நிதானமாக செல்வோம், வேலைக்கு முன்கூட்டியே செல்வோம். நண்பர்களுடன் வாகனத்தில் போட்டி வேண்டாம்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம். நண்பர்களே கடந்த 4-5 மாதங்களில் மட்டும் நாம் பலரை வாகன விபத்தால் இழந்திருக்கிறோம். மேலும் பலர் காயங்களுடன் நம்முடன் பணிக்கு வந்து செல்கின்றனர். நம்ம அடிபட்டா நம்மள மட்டும் பாதிக்காது.
1: தன் பலத்தை இழந்ததாக கருதும் தந்தை.
2: தன் நம்பிக்கையை இழந்ததாக கருதும் தாய்.
3: தன் வாழ்வையே இழந்து என்ன செய்ய யாரிடம் சொல்ல என படபடக்கும் மனைவி.
இனி இந்த மோசமான உலகில் எந்த ஆம்பளையை நம்ப என பரிதவிக்கும் மனைவி.
4:அப்பா வேலைக்கு போயிருக்காரு என நினைக்கும் நம் செல்வங்கள்
5: சகோதரனை இழந்து தவிக்கும் உடன்பிறப்பு.
6: மேலும் நம்மை அன்பாய் மாப்ள, மச்சி, டேய்,மாம்ஸ், மாப்பி, சகல, எரும, மாடு , வெட்டி என் அழைக்கும் நண்பர்கள் நம் சொந்தங்கள், சமூக, மற்றும் நட்புகள். நல்ல தொழிலாளியை இழந்து நிற்கும் நம் நிறுவனம். இதை அனைத்தையும் சற்று யோசியுங்கள்.
ஒவ்வொரு முறையும் விபத்து செய்தி கேட்டு நாங்கள் மருத்துவமனை செல்லும் போதும் விபத்துக்குள்ளானவர் உள்ளே நல்ல நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஆனால் அவருக்கு தெரியாது வெளியே அனைவரும் கதறி அழுகின்றனர் என்று.
இந்நிலை இனியாருக்கும் வேண்டாமே.
மரணம் அனைவருக்கும் வரும், ஆனால் மரணத்தை தேடி நாமே போக வேண்டாம்.
இதை படித்து ஒருவர் மாறினாலும் எங்களுக்கு சந்தோஷம்.
-- தமிழக அரசு காவல்துறை
No comments:
Post a Comment